மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியையடுத்து மாவட்டத்தில் 10609 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (10) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் வெளிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், வாழைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 8 பேரும், காத்தான்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 23 பேரும், ஓட்டமாவடி, ஏறாவூர் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒருவர் வீதம் 3 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும், செங்கலடியில் 18 பேரும், வாகரையில் 4 பேரும், பட்டிருப்பு, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் தலா 3 பேர் வீதம் 9 பேருக்கும், கிரானில் 17 பேருக்கும், காவல்துறையினர் உட்பட 189 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை தொடர்ந்து கொரோனா வைத்தியசாலைகளில் 1783 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது