நாட்டில் சீனி மற்றும் பால்மா என்பவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்றும் பல இடங்களில் எரிவாயு கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.