மட்டக்களப்பில் மேலும் 302 பேருக்கு கொரோனா

coronavirus banner
coronavirus banner

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 302 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் தொற்றாளார் 10, 991 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன் இன்று (11) தெரிவித்தார்

நாளாந்தம் மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு 80 பேரும், களுவாஞ்சிக்குடியில் 39 பேரும், வாழைச்சேனையில் 15 பேரும், காத்தான்குடியில் 31 பேரும்,ஓட்டமாவடியில் 6 பேரும், கோறளைப்பற்று  மத்தியில் 7 பேரும், செங்கலடியில் 79 பேரும், வவுணதீவில் 5 பேரும் ஆரையம்பதியில் 13 பேரும், கிரானில் 4 பேரும், மட்டு போதனா வைத்தியசாலையில் 4 பேரும், காவல்துறையினர் 9 பேருக்கும், வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் பட்டிப்பளை, வெல்லாவெளி,ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் தலை 2 பேர் வீதம் 6 பேர் உட்பட மாவட்டத்தில் 302 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்