விடுதலைப் புலிகளின் படங்களை முகநூலில் பதிவேற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் பி.கே.மோகன் எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.
கடந்த யூன் மாதம் 5 ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.