மட்டு வவுணதீவில் கசிப்பு வியாபாரிகள் இருவர் 13 லீற்றர் கசிப்புடன் கைது!

IMG 5211
IMG 5211

மட்டக்களப்பில் வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து இருந்து கரவெட்டி பிரதேசத்திற்கு வியாபாரத்திற்காக மோட்டார்சைக்கிளில் கசிப்பு கடத்திய இருவரை இன்று புதன்கிழமை (11) கைது செய்ததுடன் 13 வீற்றர் கசிப்புடன் மோட்டார்சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவதினமான இன்று பிற்பகல் கரவெட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிள் ஒன்றில் இரு இளைஞர்கள் வியாபாரத்துக்காக கசிப்பு கடத்திச் சென்ற நிலையில் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.