ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டம் இன்று (12) இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், கட்சியின் செயற்பாடுகள் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.