ஆசிரியர் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

teachers union
teachers union

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று கொழும்பில் கூடியது.

´சுபீட்சத்தின் தொலைநோக்குக் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையை அரச சேவையில் கௌரவமான தொழில்துறையாக கருதும் வகையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் தொழிற்சங்கங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது