இலங்கையில் உள்ள இரண்டு அரச மொழிகளில் சகோதர மொழியைப் பற்றி இன்னும் ஒருவர் தெரியாமல் இருப்பதற்கு வெட்கப்பட வேண்டியுள்ளது எனவும் இதற்கு கல்வி முறைமையே காரணம் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் 21 மில்லியன் மக்கள் வாழ்கின்ற போதிலும் இரண்டு மொழிகளே பேசப்படுகின்றன. எனினும், சகோதர மொழியைப் பற்றி நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு கடந்த 72 வருடங்களாக முகங்கொடுத்து வருகின்றோம். நாட்டின் கல்வி முறையில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வந்து இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள மக்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் தேசிய இனங்களாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.