அன்று இரவில் கைது செய்தது ஏன் இப்போது தவறாக தென்படுகிறது??

susil premajayantha
susil premajayantha

முன்னாள் அமைச்சர் பாட்டளி ரணவக்கவின் கைது இடம்பெற்ற நேரம் தொடர்பில் சபாநாயகருக்கோ, பிரதி சபாநாயகருக்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும், இது தொடர்பிலான தீர்மானம் சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒன்று எனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்க காலத்தில் அப்போதைய எம்.பி. பசில் ராஜபக்ஸவை கைது செய்தது இரவில் எனவும், இவருடைய வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது இரவு 11 மணிக்கு எனவும் சுட்டிக்காட்டினார்.

அன்று இரவில் கைது செய்வதை நல்லதாக பார்த்தவர்களுக்கு, இப்போதைய இரவு கைது மட்டும் ஏன் தவறாக விளங்குகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.