செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு யாழ் -மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று அஞ்சலி செலுத்தினார்.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், யாழ் மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்