புத்தளம் அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வு

puttalam
puttalam

கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளது.

கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் 10 ஏக்கர் காணி ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்துக்கு அனுப்பப்ட்டுவந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் குப்பைகளை மீழ் சுழற்சிக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் குப்பை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிட்டும் என கொழும்பு மாநகர பிரதி மேயர் மொஹமட் இக்பால் தெரிவித்தார்.