தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 277 பேர் கைது!

thanimai 1
thanimai 1

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரை 54 ஆயிரத்து 889 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்க முற்பட்ட சுமார் 330 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை த​லைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 635 பேர் இவ்வாறு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.