அசாத் சாலிக்கு எதிர்வரும் 31 வரை விளக்கமறியல்!

FYXU0lJ
FYXU0lJ

சர்ச்சைக்குாிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 31 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 31 ஆம்திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.