ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை தமது முகநூல் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அவிஷ்க குணவர்தனவின் மீது இரண்டு கிரிக்கெட் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை நிரபராதியாகக் கருதி சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.