அதிர்ஷ்ட இலாப போலி சீட்டுகளை அச்சிட்டவர் சிக்கினார்!

Pg01 Mega
Pg01 Mega

தேசிய லொத்தர் சபையால் வெளியிடப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களைப் போன்று 11 போலி சீட்டுகளை சட்டவிரோதமாக அச்சிட்ட ஒருவரைப் பலாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை நெல்லிவள பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து கடந்த 06ஆம் திகதி விநியோகிக்கப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 3 வெற்றி இலக்கங்களை கொண்ட 11 அதிர்ஷ்ட இலாப சீட்டுக்களைப் பலாங்கொடை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சீட்டுக்கள், 2 ஆயிரம் ரூபா வெற்றி தொகைக்கு மேலதிகமாக பரிசு கிடைக்கும் வகையில் இலக்கங்கள் மாற்றப்பட்டு அச்சிடப்பட்டடுள்ளன.

இதையடுத்து சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.