மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திலும் பிசிஆர் பரிசோதனைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது
குறித்த பிரதேச செயலகத்தில் சமூக சேவை உத்தியோகத்தர் கிளை அண்மையில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டதன் எதிரொலியாக இன்றைய தினம் கடமைக்கு வருகை தந்திருந்த 96 உத்தியோகத்தர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் உட்பட 6 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது