வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று (19) மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்துள்ளார்