மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்

1525180584 accident funeral L
1525180584 accident funeral L

மாத்தளை மாவட்டத்தின் கலேவெல காவற்துறை பிரிவுகுட்பட்ட மஹவெஹெர பிரதேசத்தில் இன்று  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளையிலிருந்து கலேவெல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்சாரத் தூண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நபரை கலேவெல வைத்தியசாலையில் சேர்த்தபோதிலும் குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கலேவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.