சுனாமி பேரலை தாக்கத்தின் நினைவாக 2 நிமிட மௌன அஞ்சலி

tsunami
tsunami

சுனாமி பேரலை ஏற்படுத்திய தாக்கம் நாளையுடன் 15 வருடங்களை பூர்த்தி செய்கின்றது,

சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் விசேட சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.