சம்பிக்க ரணவக்கவின் கைது எதற்கான சூழ்ச்சி??

sameera perera
sameera perera

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்ற அரசாங்கம் நாடகம் நடத்துவதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியினுள் கட்சித்தலைமை தொடர்பான பிரச்சினைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை திசைதிருப்புவதற்கு அரசாங்கம் முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான விலைகளை அரசாங்கம் குறைக்காது மணல் அகழ்விற்கான அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதாகவும், ஐ.தே.க இனால் கொண்டு வரப்பட்ட எம்.சீ.சீ. உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்போது அதில் கையொப்பிட முனைவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.