வவுனியா வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தினால் இன்று (26) வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
வவுனியாவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து செல்கின்றது இந்நிலையில் வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகள் ஏற்படுகின்றதை கருத்திற்கொண்ட இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பில் சேகரிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஒரு தொகுதி வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் கொரோனா விடுதியின் வைத்தியரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது .