கோறளைப்பற்று மத்தியில் இன்று இரண்டாவது தடுப்பூசி

09
09

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தினால் தடுப்பூசிகளை  ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் இடம்பெற்று வருகின்றது.

03 1

அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.மயூரன் தலைமையில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இரண்டாவது தடுப்பூசிகள் போடும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது

07

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்றைய தினம் ஏழு மத்திய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி ஐ.ரி.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்றது.

02 1

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று 26.08.2021 வரை 13874  நபர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் 6454  நபர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதுடன்  இன்று மாத்திரம் 1840 தடுப்பூசிகள் போடப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த தடுப்பு ஊசி ஏற்றும் பணியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.