யாழில் இன்று மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

corona death28 1 5
corona death28 1 5

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய  பெண் ஒருவரும்  கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்வடைந்துள்ளது.