கொரோனாவால் நேற்று 209 பேர் மரணம்!

corona death28 1 6
corona death28 1 6

கொவிட் தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளதாக நேற்று (25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200ஐ கடந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கொவிட் மரணங்கள் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று பதிவான 209 மரணங்களையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,157ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய,  நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரண எண்ணிக்கை இன்று 8,000ஐ கடந்தது.

நேற்று உயிரிழந்தவர்களில் 108 ஆண்களும், 101 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.