யாழில் மேலும் 6 பேர் கொரோனாவால் பலி

corona death28 1 2
corona death28 1 2

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னாள் பெண் அதிபர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்., கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உயிரிழந்த இருவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 24 வயதுடைய இளைஞர் இருவருக்கும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 68 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.