ஓட்டமாவடியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

01 8
01 8

கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வழிகாட்டலில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, கிரான் ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.

தூர இடங்களில் இருந்து வாகனம் இன்மையால் வருகை தரமுடியாமல் உள்ளவர்களை இராணுவத்தினர் தங்கள் வாகனம் மூலம் ஏற்றி வந்து தடுப்பூசிகளை செலுத்தியதுடன், நோய் வாய்ப்பட்ட நிலையில் வீடுகளில் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்தினர்.