முல்லைத்தீவில் இதுவரை 1571 பேருக்கு கொரோனா

received 361215535596723
received 361215535596723

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று வரை 1571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 578 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதாகவும் 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 578 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்

இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் தற்போது வரை 15 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. 784 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.