வவுனியாவில் புதிய அரச அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

IMG 4908
IMG 4908

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ.சரத்சந்திர இன்று (27) பதவியினை பொறுப்பேற்றார்.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்சென்றிருந்தார். இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த பி.ஏ.சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் தனது பதவியினை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.