கேரள கஞ்சா மீட்பு

IMG 20210826 WA0014
IMG 20210826 WA0014

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் புதுமாத்தளன் பகுதியில் நான்கு உரப்பைகளில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 142 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று மாலை (26)மீட்கப்பட்டுள்ளது

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பாரிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் முல்லைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது