யாழில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

IMG 20210830 WA0030
IMG 20210830 WA0030

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில்  நான்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இராணுவத்தினரால் வீடு கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG 20210830 WA0027

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த தேசிய வெசாக் தினத்தன்று வீடுகள்  பயனாளிகளிடம்  கையளிக்கப்பட இருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண  நிலை காரணமாக இன்றைய தினம் உடுவில் மற்றும் கீரிமலை பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகள் இரண்டு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால்  பயனாளிகளிடம்  கையளிக்கப்பட்டது.

IMG 20210830 WA0028

குறித்த வீடு கையளிக்கும் நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு பலாலி இராணுவ கட்டளைத் தலைமை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20210830 WA0023