ஜனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

kilinochchi
kilinochchi

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் காணமலாக்கப்பட்ட உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 30 திகதி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காணாமல் போனவர்களை மீளக்கொண்டுவர முடியாதெனவும் அவர்களுக்கான மரணச் சான்றதழ்கள் வழங்கி நிவாரணங்கள் வழங்கி வைக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.