பாகிஸ்தான் வீரருக்கு பந்துவீச தடை!!

Mohammad Hafeez
Mohammad Hafeez

பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ்க்கு, இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சு நடவடிக்கை மதிப்பீட்டைத் தொடர்ந்து அவரது பந்துவீச்சு சட்டவிரோதமானது என்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மொஹமட் ஹபீஸ் கூறுகையில்,

‘எனது பந்துவீச்சு நடவடிக்கை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை பந்துவீச்சு மறுஆய்வுக் குழு அறிக்கையைப் பெற்றுள்ளேன்.

மறுஆய்வுக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை சோதனை குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ள போதிலும், உலகம் கூறும் சகலதுறை வீரர் என்ற எனது நற்பெயரை பாதிக்கும் என்பதை உணர்ந்தாலும் பந்துவீச்சு மறுஆய்வுக் குழு அறிக்கையினை நான் மதிக்கின்றேன்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் விதிமுறைகளின்படி, ஐ.சி.சி அங்கீகாரம் பெற்ற மையத்தில் ஒரு சுயாதீன பகுப்பாய்விற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.