அடுத்த வருடத்திற்காக அச்சிடப்பட்டுள்ள பாடசாலை பாட புத்தகங்களில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை கண்டறிந்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய உரிமைகள் பாதுகாப்பு சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.