நத்தார் தினத்தன்று பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய புயலினால் 16 பேர் பலியாகி உள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நத்தார் தின கொண்டாட்டத்தை குலைக்கும் வகையில், சக்திவாய்ந்த பான்போன் புயல் தாக்கியது.
மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது.
புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.