மீண்டும் அணிக்கு திரும்பும் தவான்

shikhar ap m
shikhar ap m

எப்படி துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை தான் மறக்கவில்லை என்றும் தனது திறமை நிரந்தரமானது எனவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

உபாதையிலிருந்து மீண்டுள்ள ஷிகர் தவான், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பவுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது

“இது எனக்கு புதிய தொடக்கம். முதலில் விரலில் பந்து தாக்கி காயமடைந்தேன். அதன் பிறகு கழுத்து, கண்ணில், அதன் தொடர்ச்சியாக கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் விளையாடுவது என்னை பாதிக்கவில்லை. எப்படி துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை நான் மறக்கவில்லை. எனது திறமை நிரந்தரமானது. மீண்டும் ஓட்டங்கள் குவிப்பேன்.

எனக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்ததது மகிழ்ச்சியே. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

என்னை பொறுத்தவரை நான் களம் இறங்கி எனது திறமையை வெளிப்படுத்துவேன். மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம். எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்