கடந்த திங்கட்கிழமை இரவு மாளிகையில் உள்ள குளியலறைக்கு சென்ற பிரேசில் அதிபர் போல்சனரோ திடீரென வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிபட்டது.
இதனையடுத்து சிகிச்சை பெற்றுக்கொண்ட பிரேசில் அதிபர் சுமார் 10 மணி நேரம் மருத்துவர்களின் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.
பின்னர் இது குறித்த பிரேசில் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
என் தலை தரையில் மோதியதால் என்ன செய்தேன் என்பது உட்பட பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். சிகிச்சைக்கு பிறகே படிப்படியாக எனது நினைவுகளை மீட்டெடுத்தேன். தற்போது தான் நலமாக இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி” என தெரிவித்தார்.