சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை என்பவற்றின் உரிய அனுமதியின்றி ஒரு தொகை மருந்து பொருட்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கப்பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை நாட்டுக்கு வந்த குறித்த இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கைதானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தங்களது பைகளில் சூட்சுமமான முறையில் அவர்கள் மருந்து பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.