தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாடசாலை ஒன்றை உடைத்து அங்கிருந்த கணினிகளை களவாடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி – ஆரயம்பதி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.