அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தா விட்டால் ஆட்சியை கைப்பற்றுவோம்

fbb259a6 unp
fbb259a6 unp

அரசியல் பழவாங்கல்களை நிறுத்தா விட்டால் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டிய நிலையேற்படும் என ஐ.தே.க எச்சரித்துள்ளது.

சம்பிக்க ரணவக்க கைது, அதனைத் தொடர்ந்து ராஜிதவை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்ற நிலையில் இது குறித்து ஐ.தே.க உறுப்பினர்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் பதவியை கைப்பற்றுவதுடன் புதிய அமைச்சரவையையும் கொண்டு ஆட்சியை கைப்பற்றுவோம் என எச்சரித்துள்ளனர்.