ஹிஷாலினி வழக்கு: ரிஷாட் உட்பட மூவருக்கு விளக்கமறியல்: இருவருக்கு பிணை

rishad 890x395 c copy
rishad 890x395 c copy

தமது வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் இவ்வாறு மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதெரிவிக்கப்படுகிறது