வவுனியாவில் 7 பேர் கொரோனாவிற்கு பலி!

corona
corona

வவுனியாவில் நேற்றைய தினம் 07 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று (06) மரணமடைந்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர்களது வீடுகளில் மரணமடைந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.