புதுக்குடியிருப்பில் அதிகரித்து செல்லும் கொரோனா மரணங்கள்

corona
corona

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் சுகவீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (07) மரணமடைந்தனர்.

புதுக்குடியிருப்பு மேற்கு மற்றும் தேவிபுரம் பகுதியை சேர்ந்த 42, 84 வயதுடைய இருவரே இவ்வாறு  மரணமடைந்துள்ளவர்களாவர். குறித்த நபர்களுக்கு வேறு எவ்வித நோய்களும் அற்ற நிலையிலே மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இடம்பெற்றஇரண்டு மரணங்களுடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 13 மரணங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.