வணிக நிலையத்தில் தீ இரண்டு கோடி நாசம்!

01  3
01 3

சாவகச்சேரி தீப்பிடித்த வணிக நிலையத்தில் இருந்த 2 கோடி ரூபா பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன .

சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள வணிக நிலையத்தில் இந்தத் தீவிபத்து இன்று மாலை ஏற்பட்டுள்ளது.

பரம்ஸ் என்ற மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே தீப்பரவலுக்கு காரணம் எனத் முதற்கட்ட்மாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர், பொலிஸார் ,மற்றும் இராணுவத்தினரும், இணைந்தனர்.அங்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.

அருகில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையத்துக்கும் தீ பரவியது. எனினும் சுமார் 35 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.