தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமாயின் மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடம் நிறைவடையும் வரையில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்னபற்றி நடக்குமாறும் குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.