தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 70,694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்குள் நுழைய கூடிய 13 நுழைவுகளில் 1057 வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை அநாவசியமாக மேல்மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 193 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.