வெள்ளை வேன் விவகாரத்துடன் தொடர்புடைய இருவரும் நீதிமன்றில் ஆஜர்

vellai van
vellai van

வெள்ளை வேன் விவகாரம் தொடர்பிலான செய்திகளை வெளியிட்ட விடயத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்ட இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.