அடுத்த ஆண்டுஅவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகிக் கொண்டிருப்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின்முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்துக்கான அதிக பளுவை சுமக்க நேரிட்டுள்ளதால் பந்துவீசுவதை தவிர்த்துள்ளேன். எனினும், நியூசிலாந்துடளான சுற்றுப்பயணத்தின் பிறகு ரி-20 போட்டிகளில் பந்துவீச வேண்டும் என தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
எனவே நான் ரி-20 போட்டிகளில் மீண்டும் பந்துவீச எண்ணியுள்ளேன்எனவும் அவர் தெரிவித்துள்ளார் .