விலங்கு உணவை, அத்தியாவசிய பொருளாக அறிவிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மிருகவள, விவசாய நில மேம்பாடு, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், விவசாயத்துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்குணவுகளின் விலை அதிகரிக்கின்றமையால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றமை இந்த தீர்மானத்திற்கு காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.