நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 500,000ஐ கடந்தது!

corona 3
corona 3

கொரோனா தொற்று உறுதியான மேலும் 792 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,070 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500,764 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500,000ஐ கடந்துள்ளது. இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,186 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 429,776 ஆக அதிகரித்துள்ளது.