போலியான கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி குடியுரிமை விசா ஆகியவற்றுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்த இளைஞர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.